×

சாத்தூர் அருகே வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்குப்பதிவு

சாத்தூர், டிச.20: சாத்தூர் அருகே புதுச்சூரங்குடியை சேர்ந்தவர் மகாலட்சுமி(25). இவருக்கும் வெம்பக்கோட்டை அருகே சிவலிங்காபுரத்தை சேர்ந்த மதன்குமார்(27) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் 9 பவுன் தங்க நகையும், ரூ.50 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சீதனமாக கொடுத்துள்ளனர். ஆனால், கூடுதல் வரதட்சணை கேட்டு மகாலட்சுமியை அவரது கணவர் மதன்குமார், மாமனார் செல்வராஜ்(58),மாமியார் மாரியம்மாள்(52), நாத்தனார் நிர்மலா தேவி(31), அவரது கணவர் சேர்முக்கனி(34) கொடுமைப்படுத்துவதாக சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மகாலட்சுமி புகார் அளித்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்த சாத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dowry ,Sattur ,
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்