×

அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில் மார்கழி மாத உற்சவ திருவிழா

அலங்காநல்லூர், டிச. 20: அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில் 49ம் ஆண்டு மார்கழி மாத உற்சவ விழா நடந்தது. கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் முதல்நாள் அபிஷேக ஆராதனைகளும் பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும், பல வண்ண மலர்களாலும் சிறப்பு அபிஷேகமும் அர்ச்சனையும் நடந்தது. இரண்டாம் நாள் கொரோனா வைரஸ் நீங்கவும், உலக மக்கள் நன்மை வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று மூன்றாம் நாள் சிறப்பு அன்னதானமும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வான வெடிகள் முழங்க ஐயப்பன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து தீப ஆராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி சீனிவாசன் மற்றும் அலங்காநல்லூர் வட்டார ஐயப்ப, முருக பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Maraganallur Aiyappan Temple Month Festival ,
× RELATED முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும்...