×

டூவீலர்கள் மோதல்; வாலிபர் பலி

சின்னமனூர், டிச. 8: சின்னமனூரைச் சேர்ந்தவர் வாலிபர் வேல்முருகன். இவர், நேற்று முன்தினம் டூவீலரில் உத்தமபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கம்பம் பழைய சோதனைச்சாவடி தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிரவீன் (20) என்பவர், சின்னமனூரில் உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மறுபடியும் டூவீலரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னமனூர் பழைய பாளையம் பிரிவு அருகே, வேல்முருகன் சிக்னல் போடாமல் வலதுபுறமாக திரும்பியதாக கூறப்படுகிறது.     

இதனால், பின்னால் வந்த பிரவீன் டூவீலர், வேல்முருகனின் டூவீலரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட பிரவீன் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சின்னமனூர் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.   

Tags : Valipar ,
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!