க.பரமத்தி, டிச. 18: க.பரமத்தி அடுத்த புன்னம்பசுபதிபாளையம் பகுதியில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் வழிகாட்டுதலின் படி இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புன்னம் ஊராட்சி பசுபதிபாளையம் தொடக்கப்பள்ளியில் தொடங்கி நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு பசுபதிபாளையம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அழகுராசு வரவேற்றார்.
க.பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தொடர்ந்து விழிப்புணர்வு குழுவினர் கலந்து கொண்டு பெற்றோர்கள் வீட்டிற்கே வந்து கல்வி கற்பிப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆடல் பாடலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தன்னாலர்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.