×

சேரன்மகாதேவியில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு மரத்தில் தூக்கில் தொங்கினார்

வீரவநல்லூர், டிச. 17: சேரன்மகாதேவியில் மாயமான வாலிபர் தாமிரபரணி ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் அடுத்த தெற்குஅச்சம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் விஜயபாஸ்கர் (30). இவர் அங்குள்ள மில்லில் வேலை பார்த்து வந்த இவருக்கும், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பக்தபிரியம் தெருவைச் சேர்ந்த குப்பையாண்டி மகள் தமிழ்ச்செல்வி (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டதால்  சேரன்மகாதேவியில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த விஜயபாஸ், நெல்லையில் வேலை பார்க்க ஏற்பாடு செய்து வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த விஜயபாஸ்கர் திடீரென மாயமானார். இதனால் பதறிய குடும்பத்தினர் பல்ேவறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அவர் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள மருதமரத்தில் தூக்கிட்டு தொங்கினார். தகவலறிந்து விரைந்துசென்ற சேரன்மகாதேவி போலீசார், விஜயபாஸ்கரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிந்து விசாரணை
நடத்திவருகிறார்.

Tags : Cheranmakhadevi ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...