×

கந்தர்வகோட்டையில் மதுபான ஆலை டிரைவர் மர்மச்சாவு


கந்தர்வகோட்டை, டிச.16: கந்தர்வகோட்டையில் மதுபான ஆலை டிரைவர் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மட்டங்கால் கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன்-அம்சவல்லி தம்பதியின் மகன் சரண்ராஜ் (30). இவர் கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் மதுபான ஆலையில் டிரைவராக கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு (15ம்தேதி) ஊழியர்களை அழைத்து வந்து கம்பெனியில் இறக்கிவிட்டு சரண்ராஜ் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். மதுபான ஆலை நிறுவன காவலாளி வெளிப்புறம் சுற்றிப் பார்த்தபோது, சரண்ராஜின் டூவீலர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது கம்பெனி வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே உள்ள கொய்யா மரத்தில் சரண்ராஜ் தூக்கில் மர்மமாக தொங்கினார். காவலாளி கூச்சலிடவே அருகில் இருந்தோர் ஓடிவிந்த சரண்ராஜ் சடலத்தை கீழே இறக்கினர்.

தகவலறிந்த கந்தர்வகோட்டை தாசில்தார் புவியரசன், இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் ஆர்ஐ சந்தானலட்சுமி, விஏஓ சிவசக்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த டிஎஸ்பி லில்லிகிரேஸ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். மேலும், சரண்ராஜ் உடலை புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுபான ஆலையின் வாகன ஓட்டுனர் மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Marmachavu ,Kandarwakottai ,
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு...