×

(வேலூர்) தடுப்புச்சுவர் மீது பைக் மோதி வியாபாரி பலி

பள்ளிகொண்டா, டிச.16: பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி வடக்கு காலணியை சேர்ந்தவர் கோபி(45). இவரது மனைவி சாந்தி. தம்பதிக்கு 2 மகளும், 1 மகனும் உள்ளனர். பள்ளிகுப்பம் செல்லும் சாலையில் கோபி சிற்றுண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஓட்டலுக்கு தேவையான மளிகை பொருட்களை எடுத்து வர பைக்கில் கோபி வீட்டிற்கு சென்றார். அகரம்சேரி சர்வீஸ் சாலை வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவர் மீது பைக் மோதியது. இதில், கோபி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் கோபி மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்த கோபியை மீட்டு, பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீஸ் எஸ்ஐ கண்ணன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

Tags : Velore ,
× RELATED வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹2 கோடி வர்த்தகம்