×

விளாத்திகுளம் அரசு கல்லூரியில் பூந்தோட்டம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

விளாத்திகுளம், டிச.16:  விளாத்திகுளம் சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மலர் பூந்தோட்டம் அமைக்கும் பணியை மார்க்கண்ேடயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சுமார் 4000 சதுரஅடியில் மலர் பூங்கா அமைப்பதற்கான பணியை மார்க்கண்ேடயன் எம்எல்ஏ பூஞ்செடிகள் நட்டி துவக்கி வைத்து, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி மாணவ-மாணவிகளிடம் உரையாடினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ஜெயாலிலசீதா, விளாத்தி குளம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் பேரூர் 10வது வார்டு அவைத்தலைவர் லெனின் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Tags : Markandeyan ,MLA ,Vilathikulam Government College ,
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...