ஊட்டி, டிச. 15: ஜெகதளா, கோத்தகிரி, கட்டபெட்டு, ஒன்னட்டி மற்றும் கெரடா மட்டம் துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் நாளை (16ம் தேதி) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெகதளா, கோத்தகிரி, கட்டபெட்டு, ஒன்னட்டி மற்றும் கெரடா மட்டம் துணை மின் நிலையங்களில் நாளை (16ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, இந்த துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்க இயலாது. ஜெகதளா துணை மின் நிலையத்தை சார்ந்த அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிச்சோலை, வெலிங்கடன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி மற்றும் மவுண்ட் பிளசண்ட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மேலும், கோத்தகிரி துணை மின் நிலையத்தை சார்ந்த கோத்தகிரி, சுண்டட்டி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஒரசோலை, நாரகிரி, கேர்கொம்பை,
கன்னேரிமூக்கு, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, அரவேனு, பேரகணி, கேர்பெட்டா, மிலித்தேன் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதேபோல், கட்டபெட்டு துணை மின் நிலையங்களில் ஒரசோலை, வெஸ்ட்புரூக்,கூக்கல்தொரை, தொரைஹட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னக்குன்னூர், அணிக்கொரை, டி.மணிஹட்டி, பில்லிக்கொம்பை, பையங்கி, கலிங்கனட்டி மற்றும் மசக்கல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
ஒன்னட்டி துணை மின் நிலையத்தை சேர்ந்த பங்களாபாடி, கடினமாலா, கெங்கரை, கூட்டாடா, கீழ்கோத்தகிரி, கோயில்மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, மஞ்சமலை காலனி ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. மேலும், கெரடாமட்டம் துணை மின் நிலையத்தை சேர்ந்த கெரடாமட்டம், கோடநாடு, ஈளாடா, அண்ணாநகர், காந்திநகர், நெடுகுளா மற்றும் கர்சன் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.