×

அம்பேத்கர் நினைவுதினம்

தேவகோட்டை, டிச.13: தேவகோட்டை தாலுகா திட்டுக்கோட்டை கிராமத்தில் அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை சீனமங்களம், தாஸ்புரம், திட்டுக்கோட்டை ஆகிய கிராம இளைஞர்கள் நடத்தினர். தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் முகாமை  தொடங்கி வைத்தார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள், உறுதிக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகணேசன், திராணி ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பாண்டியன் மற்றும் ஆசிரியர் சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Ambedkar Memorial Day ,
× RELATED அம்பேத்கரின் நினைவு தினம்: எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை