ஊட்டி, டிச.13: பாவேந்தர் இலக்கிய பேரவை மற்றும் ஊட்டி ஒய்எம்சிஏ பள்ளி ஆகியவை சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் தூனேரி அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கிராமிய இசையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலை இலக்கிய நிகழ்வில் பங்கேற்ற ஒய்எம்சிஏ பள்ளி மற்றும் தூனேரி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஒய்எம்சிஏ நிர்வாகி பாஸ்கர் சதானந்த், கவிஞர் ஜனார்த்தனன், புலவர் சோலூர் கணேசன், வாசுதேவன், நாகராஜ், மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், முன்னதாக ஒய்எம்சிஏ., செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்றார். ஜேபி., நன்றி கூறினார்.