×

சாத்தூர் அருகே குப்பைக் கிடங்காக மாறும் குடியிருப்புப் பகுதி

சாத்தூர், டிச. 11: சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக சிதம்பரம் நகர், எஸ்.ஆர்.நாயுடு நகர் மற்றும் என்.ஜி.ஓ காலனி பகுதிகளில் சேகரிக்கப்படும் தினசரிக் குப்பைகள் பாரதி நகர் குடியிருப்புகளுக்கு அருகே கொட்டப்படுகின்றன.

இதனால், அப்பகுதி வரையறுக்கப்படாத குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. தற்போது, மழைக்காலம் என்பதால் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளில் அதிகளவில் நெகிழிகள் கிடக்கின்றன. கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில், இக்கழிவுகள் பல்வேறு நோய்களுக்கும், நோய்க்கிருமிகளுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பைக் கழிவுகளை மீண்டும் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sattur ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது