×

அம்மாபேட்டையில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்

தஞ்சை, டிச.11: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காளாச்சேரியை சேர்ந்தவர் மகேந்திரன் (35). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆதனூர் மண்டபம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தபோது நாகப்பட்டினத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து உரசி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகேந்திரன் அந்த பஸ் நம்பரை குறித்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையிலிருந்து வந்த அந்த பஸ்சை ஆதனூர் மண்டபம் பகுதியில் மகேந்திரன் நிறுத்துமாறு சைகை செய்துள்ளார். ஆனால் அது விரைவு பேருந்து என்பதால் அந்த ஸ்டாப்பிங்கில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் ஆட்டோவில் பஸ்சை தொடர்ந்து வந்து அம்மாப்பேட்டையில் வழிமறித்து பஸ் டிரைவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து பஸ் டிரைவர் புனவாசல் பண்ணையூரை சேர்ந்த திருச்செல்வம் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.tஇதன்பேரில் போலீசார் மகேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பவம் நடந்த தினத்தில் பஸ்சை இயக்கி வந்தவர் மற்றொரு டிரைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags : Ammapettai ,
× RELATED 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் வண்டி...