×

பேரையூரில் இன்று மின்தடை

திருமங்கலம், டிச. 10: பேரையூர் மற்றும் சாப்டூர் துணைமின் நிலையங்களில் இன்று(டிச.10) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரையில் பின்வரும் பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும். பேரையூர் நகர் பகுதிகள், சந்தையூர், மேலப்பட்டி, கீழப்பட்டி, பாளைபட்டி, சென்னம்பட்டி, கூவலாபுரம், ராவுதம்பட்டி, மீனாட்சிபுரம், பி.அம்மாபட்டி, சாலிசந்தை, பி.ஆண்டிப்பட்டி, பழையூர், அத்திபட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, சின்னவண்டபுலி, அய்யம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமபகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags : Peraiyur ,
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி