×

மெமு பயணிகள் ரயில்கள் டிச.15 முதல் மீண்டும் இயக்கம்

பாலக்காடு, டிச.10:  கொல்லம் - செங்கோட்டை, கொல்லம் - திருச்சிராப்பள்ளி - திருப்பாண்டிபுலியூர் டெமு, மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்குவதற்கான ஆலோசனை நடைபெற்றது. இதில், பாலக்காடு சந்திப்பு - எர்ணாகுளம் சந்திப்பு - பாலக்காடு சந்திப்பு மெமு ரயில் பாலக்காடு சந்திப்பிலிருந்து டிச.15ம் தேதி காலை 7.20க்கு புறப்பட்டு 11.50க்கு எர்ணாகுளம் சந்திப்பை அடைகிறது. இந்த ரயில் மதியம் 2.40 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு பாலக்காடு சந்திப்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டது.
பாலக்காடு சந்திப்பு - திருச்செந்தூர் - பாலக்காடு இயங்கிய பயணிகள் ரயில் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் பொள்ளாச்சி சந்திப்பு - திருச்செந்தூர் - பொள்ளாச்சி சந்திப்பு என்ற நிலையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், பாலக்காடு சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளது கேரள பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Tags : Memu ,
× RELATED பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு...