×

திருச்சி ரயில் நிலையம் முன் ‘‘செல்பி பாயிண்ட்”

திருச்சி, டிச.10: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் திருச்சி மண்டல ரயில்வேயில் வருடாந்திர ஆய்வு பணிகளை நேற்று மேற்கொண்டார். இதில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஐஆர்சிடிபி மையத்தையும் அதனை சார்ந்த உணவகத்தையும் திறந்து வைத்தார். மேலும் பயணிகளின் வசதிக்காக வாடகைக்கு இ.பைக் சேவையையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஜங்ஷன் ரயில் நிலைய முகப்பு பகுதியில் பயணிகளை கவரும் வகையிலும், வரவேற்கும் வகையில் புதிதாக நிறுவப்பட்ட ‘‘ஐ லவ் திருச்சி” என்ற வாட்டர் லோகோவுடன் கூடிய செல்பி பகுதியையும் திறந்து வைத்து அதன்முன் செல்பி எடுத்து கொண்டார். அதை தொடர்ந்து புனரமைக்கப்பட்ட கல்லுக்குழி ரயில்வே மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரயில்வே போலீசாருக்கான ரோந்து பைக்குகளை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆய்வு பணிகளின்போது அவருடன் திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் மனீஸ் அகர்வால் உடனிருந்தார்.

Tags : Selby Point ,Trichy Railway Station ,
× RELATED தேர்தல் எதிரொலி திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை