×

கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், டிச.8: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சரால் சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் “கபீர் புரஸ்கார்” விருது தொடர்பாக தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருது சமூக வகுப்பு, நல்லிணக்கத்திற்காக தியாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களை மூன்று நிலைகளாக தரம் பிரிக்கப்பட்டு, சான்றிதழுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படவிருக்கிறது. தகுதியான விண்ணப்பப்படிவங்களை 08.12.2021-க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டு அரங்கம், நாகர்கோவில் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.  இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருநள்ளாறு அடுத்த சேத்தூர் மகா...