×

ஒரே நேரத்தில் ஒரே சாலையில் இரண்டு பணிகள்

போடி, டிச.6: போடி சாலையில் ஒரே நேரத்தில் குழாய் பதிக்கும் பணி, சாலை போடும் பணி நடைபெற்றதால் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடி நகராட்சி குப்பிநாயகன்பட்டி கியாமியான் கோயிலில் இருந்து சுப்புராஜ் நகர் வஞ்சி ஓடை மற்றும் ரயில்வே சாலை வழியாக  நேற்று முன்தினம் தார்ச்சாலை போடும் பணி நடைபெற்றது. அதே சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஒரே நேரத்தில் ஒரே சாலையில் இரண்டு பணிகள் நடந்ததால் ேபாக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில், இப்பணிகளை எடுத்த ஏலதாரர்கள் சரியாக பிளான் பண்ணாமல் முன்யோசனையின்றி அவர்களின் இஷ்டத்திற்கு பணிகள் மேற்கொள்வதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் ஊரைச் சுற்றிச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போடி நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஏலதாரரிடம் முறையாக பிளான் செய்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்