×

கீரனூரில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி உண்ணாவிரம்

புதுக்கோட்டை, டிச.5: கீரனூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லக் கோரி நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் கலியநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன், வர்த்தகர்கள் அமைப்புகளின் தலைவர்கள் மாணிக்கம், வீராசாமி, தமிழர் வட்டம் சார்பில் கவித்துவன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பவுல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. கையெழுத்து இயக்கத்தை கீரனூர் பகுதி முழுவதும் நடத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

Tags : Keeranur ,
× RELATED கீரனூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது