×

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

நாசரேத், டிச.3:பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சபைமன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபைமன்ற அளவிலான ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது. பிரகாசபுரம் சேகரகுரு தேவராஜன் தலைமை வகித்தார். ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குனர் ஜெபவாசகன் சிறப்புசெய்தி கொடுத்தார். அனைத்து சேகரத்தில் உள்ள ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் குழு குழுவாக நின்று கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். இதில் குருமார்கள் ஜோஸ்வா, ஜேசன், ஆசீர், டிக்சன், வெஸ்லி, ரூபன், பீட்டர், பாஸ்கரன், செல்வராஜ், ஜெபஸ்டின், ஓய்வுபெற்ற குருமார்கள் தேவராஜ் ஞானசிங், டேனியல்ராஜ், கிறிஸ்டியன் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேகரகுரு தேவராஜன் தலைமையில் சேகர செயலாளர் மோகன், பொருளாளர் சாமுவேல், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ராபர்ட், ஞானராஜ், சபை ஊழியர் ஸ்டான்லி, ஸ்டீபன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

Tags : Christmas ,Holy Trinity Temple ,Prakasapuram ,
× RELATED பிரகாசபுரம் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு