×

புதுச்சேரியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, டிச. 3: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 2,354 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 21, காரைக்கால்- 4, மாகே- 8 பேர் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை. மாநிலத்தில் புதிதாக உயிரிழப்பு இல்லை.

இதுவரை 1,873 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. இதுவரை 19,88,127 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 16,86,473 நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,28,998 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 22 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 15 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 240 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 299 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 23 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,826 ஆக உள்ளது.

Tags : Corona ,Pondicherry ,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!