×

அதிராம்பட்டினம் அருகே கிராம உதவியாளர் வீட்டில் 3 பவுன்நகை, பணம் கொள்ளை

அதிராம்பட்டினம், டிச.2: அதிராம்பட்டினம் அருகே ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (62). கிராம உதவியாளராக வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்று உள்ளார். இந்நிலையில் இவர் பட்டுக்கோட்டை கரிக்காட்டிலுளள தனது மகன் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் நேற்றுமுன்தினம் இரவு சென்றார். மீண்டும் நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபொழுது பின்புறக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் உள்ள 3 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து ஆறுமுகம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Adirampattinam ,
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...