×

பரமக்குடியில் நீர் மோர் பந்தல்

பரமக்குடி, ஏப்.16:  பரமக்குடியில் அதிமுக நகர ஜெயலலிதா பேரவை சார்பாக, இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பரமக்குடி பேருந்து நிலையம் அருகே கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தாகத்தைத் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். பரமக்குடி நகர் ஜெ.பேரவை செயலாளர் வடமலையான் வரவேற்றார். மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பால்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் தண்ணீர் ஆகியவற்றை மாவட்ட செயலாளர் முனியசாமி வழங்கி நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், பார்த்திபனூர் நகர செயலாளர் வினோத், இளைஞர் பாசறை துணைச் செயலாளர் தினேஷ், நகர அவைத்தலைவர் நயினா முகமது, நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் யோக மணிகண்டன், நகர் மகளிர் அணி திலகவதி உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Paramakudi ,
× RELATED பஸ் விபத்தில் 9 பேர் காயம்