×

வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறை கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு

காரைக்குடி, ஏப்.14: காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிவாரியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையத்தை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாதுகாப்பு அறைக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தவிர பாதுகாப்பு மையங்களை சுற்றி 200 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளுக்கான தனித்தனி டிவியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அரசு அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் சுழற்சி முறையில் தங்கள் தொகுதிக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு தன்மை குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மையத்தை சுற்றி 4 உயர்கோபுரம் அமைக்கப்பட்டு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் சட்டமன்ற தேர்தல் அலுவலர்கள் மற்றும் டி.எஸ்.பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற முறையில் நான் நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறேன். பாதுகாப்பு மையத்தின் பாதுகாப்பு மிகச்சாரியான முறையில் இருந்து வருகிறது என்றார். ஆர்டிஓ சுரேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Madhusudan Reddy ,
× RELATED மானியம் குறித்து தகவல் கேட்டதால்...