×

பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் தேங்கிய சாக்கடை கழிவு நீர்

ராசிபுரம், ஏப்.14: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது பிள்ளா நல்லூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட 11, 12 வது வார்டு மேட்டுத்தெரு பகுதியில் பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குட்டை போல் தேங்கி உள்ளது. மேலும் குடியிருப்புகளில் இருந்தும் சாக்கடை நீர் முறையாக செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவு நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி உள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி பலமுறை முறையிட்டும் குப்பை மற்றும் சாக்கடை கழிவு நீரை வெளியேற நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சாக்கடை நீரை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Pillanallur ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு