×

வலங்கைமான் அடுத்த அரவூர் பகுதியில் பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

வலங்கைமான், ஏப்.13: வலங்கைமான் அடுத்த அரவூர் பகுதியில் பழுதடைந்த உள்ள தார் சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அரவூர் ஊராட்சி பகுதி அரவத்தூர் கிராமத்திற்கான பிரதான சாலை மாணிக்கமங்கலம் சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது. சுமார் 600 மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை சிறிதும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் கரடுமுரடாக கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களை சார்ந்த இப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழுதடைந்த சாலையால் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

கிராம கூட்டுறவு அங்காடி இப் பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த சாலையிலேயே சென்று வருகின்றது .மேலும் மழைக்காலங்களில் இருபுறமும் ஒதுங்கமுடியாமல் அருகில் உள்ள விளைநிலங்கள் அல்லது கால்வாய்களில் வாகனங்கள் கவிழும் அபாயம் இருந்து வருகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்துவதுடன் தார்சாலையை மேம்படுத்தி அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Darsala ,Valangaiman ,Aravur ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு