×

மேற்கு தொடர்ச்சி மலையில் மூன்று நாட்களாக எரியும் காட்டுத்தீ

பெரியகுளம், ஏப். 13: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயால் விலை உயர்ந்த மரங்கள், முலிகை செடிகள் எரிந்து நாசமாயின. பெரியகுளம் அருகே உள்ள செலும்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடுக்கம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது. மேலும் மூன்று நாட்களாகபற்றி எரியும் காட்டு தீ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பற்றி எரிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் அடர்ந்த விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் காட்டு தீயினால் எரிந்து கருகி வருகின்றன. இந்த தீயினால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் கடந்த மூன்று நாட்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை வனத்துறையினர் விரைந்து அணைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Western Ghats ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...