×

ஈத்தாமொழி அருகே சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு வலை

ஈத்தாமொழி, ஏப். 12: ஈத்தாமொழி அருகே உள்ள கேசவன்புத்தன்துறை ராயப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் மரியசெல்வம். இவருக்கும் இவரது சகோதரர்கள் டென்னிஸ்(59), டெனிலர்(59), ரைமண்ட்(55), ஆகியோருக்கும் இடையே கடந்த இரண்டரை வருடமாக சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று மரியசெல்வம் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு டென்னிஸ், அவரது மகன் ஆஷிக் மற்றும் டெனிலர், ரைமண்ட் ஆகியோர் சென்றனர். அப்போது மரியசெல்வத்தின் மனைவி செல்வறோஸ் பாத்திமாமேரி(52) இருந்தார். அவரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி உள்ளனர். இது குறித்து செல்வறோஸ் கொடுத்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags : Ithamozhi ,
× RELATED ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் கால்நடை விழிப்புணர்வு முகாம்