×

பொதுமக்கள் வலியுறுத்தல் கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

கறம்பக்குடி, ஏப். 10: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக கறம்பக்குடி காவல் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி முள்ளங்குருச்சி அருகே உள்ள சாந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் (45). இந்திரா காலனியை சேர்ந்த திருமுருகன் (41), கண்டியன் தெருவை சேர்ந்த அண்ணாதுரை (40), குலக்காரன் தெருவை சேர்ந்த செல்வம் (60) மற்றும் கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த பெண் இளமுருகு (40) ஆகிய 5 பேரும் தனித்தனியே வீடு மற்றும் கடை தெருக்களில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 20 பீர் பாட்டில்கள் உள்பட 60 பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Karambakudy ,
× RELATED புதுக்கோட்டையில் 27வது நாளாக தொடரும் போராட்டம்