×

குளித்தலை பேராள குந்தாளம்மன் கோயில் திருவிழா

குளித்தலை, ஏப்.9: குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 8 ஊர் கிராமங்களுக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை காந்திசிலை அருகே ஊர் காவல் தெய்வமான பேராள குந்தாளம்மன் அம்மன் கோவில் உள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி கடந்த 4ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடம்பன்துறை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் இரவு நேரங்களில் கோவிலிலிருந்து புறப்பட்ட சக்கரத்தேர் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

நேற்றுமுன்தினம் குளித்தலை நகரப் பகுதிக்குள் ஓலை பிடாரி அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மன் சென்ற வீதிகளில் பொது இளநீர் கொண்டுவந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து வியாழக்கிழமை குளித்தலையில் உள்ள கிராம பகுதிகள், கோட்டைமேடு, மயிலாடி, குட்டப்பட்டி, புதுப்பாளையம், அய்யனேரி, வை.புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அம்மன் வீதியிலா நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு அம்மன் கோயிலுக்கு வந்தடைந்து மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) நகர பகுதியில் முக்கிய வீதி வழியாக வீதிஉலா நடைபெற்று கிடா வெட்டுதல் நிகழ்ச்சியுடன், அம்மன் குடிபுகும் திருவிழாவுடன் விழா முடிவடைகிறது. இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர் ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Kulithalai Perala Kundalamman Temple Festival ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை;...