கோவை, ஏப். 9: கோவை இந்துஸ்தான் மறுத்துவமனையில் தீயணைப்பு காவல் துறை சார்பாக தீயணைப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் தீயணைப்பு சாதனங்கள், தீயணைப்பு செயல்முறைகள் மற்றும் தீயணைப்பு சாதனங்களின் செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் இந்துஸ்தான் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.