×

பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.2.82 கோடி

பழநி, ஏப்.9: பழநி கோயிலில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில் ரூ.2.82 கோடி வசூலானது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த 58  நாட்களுக்கான உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. வங்கி ஊழியர்கள், கோயில் அலுவலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்க பணமாக ரூபாய் 2 கோடியே 82 லட்சத்து 87  ஆயிரத்து 560 கிடைத்தது. தங்கம் 1172 கிராம், வெள்ளி 23,645 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 148 ஆகியவை கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியை அறங்காவலர் குழுத் தலைவர் அப்புக்குட்டி, பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். தொடர்ந்து இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.

Tags : Palani ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை