×

ஆலவயல் மஞ்சுவிரட்டு ரத்து ஊர் கூட்டத்தில் முடிவு

பொன்னமராவதி, ஏப்.8: கொரோனோ பரவல் காரணமாக ஆலவயல் மஞ்சுவிரட்டு ரத்து செய்யப்படுவதாக ஊர்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலவயல் வேட்டைக்காரன் சுவாமி கோயில் விழாவை முன்னிட்டு நாளை (9ம் தேதி) வௌ்ளிக்கிழமை அந்த கோயில் முன்பு உள்ள நாத்துக்கண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி பெற மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மஞ்சுவிரட்டு நடத்துவது குறித்து ஊர்கூட்டம் மிராஸ் அழகப்பன் அம்பலம் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இதில் கொரோனோ பரவல் அதிகரித்துவருவதால் நாளை நடைபெற இருந்த ஆலவயல் மஞ்சுவிரட்டு ரத்துசெய்யப்படுவதாக இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags : Alavayal Manchurian ,
× RELATED தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்