திருச்சி, ஏப்.4: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி கடைவீதிகளில் வாக்குசேகரித்தார்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 7 மணியுடன் ஓய்ந்தது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தினந்தோறும் தொகுக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் அமைச்சருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளும், பாஜக, தமாகா, பாமக போன்ற கூட்டணி கட்சியினரும் பிரசாரம் செய்து வாக்குசேகரித்தனர்.
நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். காலை ஜாபர்ஷாதெரு, டைமன்பஜார், பெரியகடைவீதி போன்ற பகுதிகளில் உள்ள கடைகளிலும், வீடுகளிலும் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்களிடடையே வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், அதிமுக அரசின் சாதனைகள் தொடரவும், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட நலத்தி–்ட்டங்கள் கிடைத்திடவும்,எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டுகிறேன். என்றார்.