ராமநாதபுரம், ஏப்.5: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குக்கிராமங்கள், நகர்புறங்களில் தரமான சாலை வசதி அமைத்து தரப்படும் என திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உறுதியளித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கீழக்கரை நகராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தார். அவர் கூறுகையில், ராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக மீண்டும் செயல்படுத்தப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு தமிழக இளைஞர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றார். கீழக்கரை நகர் திமுக செயலாளர் பசீர் அஹமது மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தை, ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத் தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.