×

அடிக்கடி அழுது சேட்டை செய்ததால் பிஸ்கெட் கவரை வாயில் திணித்து 1 வயது பேரனை கொன்ற பாட்டி

கோவை:  கோவை ஆர்.எஸ். புரம் அருகே லாலி ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம். கார் டிரைவர். இவரது மனைவி நந்தினி (24). தனியார் மருத்துவமனை ஊழியர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக 4 வயது மகனுடன் நித்தியானந்தம் பிரிந்து சென்று விட்டார். நந்தினி ஒரு வயது குழந்தை துர்கேசுடன்  தாய் நாகலட்சுமி (50)யுடன் வசித்துள்ளார். நந்தினி காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 8 மணிக்கு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தபோது தொட்டிலில் குழந்தை துர்கேஷ் பேச்சு மூச்சின்றி கிடந்ததால் பதறிப்போய் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவலறிந்து ஆர்.எஸ்.புரம் போலீசார்,  பாட்டி நாகலட்சுமியிடம் விசாரித்தபோது, அடிக்கடி அழுது சேட்டை செய்ததால் குழந்தையை அடித்து, வாயில் பிஸ்கெட் கவரை திணித்து தொட்டிலில் படுக்க வைத்ததும், இதில் குழந்தை மூச்சு திணறி இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகலட்சுமியை கைது செய்தனர்….

The post அடிக்கடி அழுது சேட்டை செய்ததால் பிஸ்கெட் கவரை வாயில் திணித்து 1 வயது பேரனை கொன்ற பாட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,R.S. Nithyanandham ,Lally Road ,Puram ,Nandini ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...