×

கொடைக்கானலில் திமுகவை ஆதரித்து தெருமுனை பிரசாரம்

கொடைக்கானல், ஏப். 3: தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பழனி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து கொடைக்கானல் நகர்ப்பகுதிகளான முஞ்சிக்கல், நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளும் மத்திய, மாநில அரசுகளின் குறைகளை சுட்டி காண்பித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தை கட்சினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kodaikanal ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு