×

புரட்சி பாரதம் நிறுவனர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி

திருவள்ளூர், ஏப் .2: பகுஜன் சமாஜ் கட்சியின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஏ.சி.சத்தியமூர்த்தி பூந்தமல்லி ஒன்றியம் சித்துக்காட்டில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம்.மூர்த்தியின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார். இவர் கூடப்பாக்கம், நேமம், ஜமின்கொரட்டுர், உக்கோட்டை, சமத்துவபுரம், வெள்ளவேடு, சித்துகாடு உள்பட பல்வேறு கிராமங்களில் வீடு, வீடாக சென்று யானை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது கிராம மக்கள் திரண்டு வந்து எங்களது வாக்கு யானைச் சின்னத்திற்கு தான் என வாழ்த்தி ரூபாய் நோட்டு மாலையை அணிவித்தும், மாலை, கிரீடம் அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.
 வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வீட்டில் ஒருவருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கப்படும்.  பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி இந்த 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளபடியே ஏழை எளிய மக்களுக்கு விவசாய நிலம் 3 ஏக்கர் இலவசமாக கொடுக்கப்படும். பாபாசாகேப் அம்பேத்கரின் கனவை தனது லட்சியமாகக் கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் பணியாற்றி கொண்டிருக்கிறது. இந்த லட்சியம் வெற்றி அடைவதற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யானைச் சின்னத்திற்கு வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை கிடையாது. மாறாக ஒரு நோட்டு ஒரு ஓட்டு என்கிற கொள்கையின் அடிப்படையில் வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி மக்களிடமிருந்து ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு ஓட்டையும்  கேட்டுவருகிறார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம், மாவட்ட பொருளாளர் ஜெய்பீம் செல்வம்,  அம்பேத் ஆனந்தன்,  வீரா விஜி, ஆர்.டில்லி, வழக்கறிஞர் ராக்கெட் ராஜேஷ், சித்துக்காடு ரவிக்குமார், கவி, செவ்வை ராஜ், சுரேஷ், தொழுவூர் கபிலன், வதட்டுர்  நாகராஜன், இளங்கோ, சாலமோன், கீழானூர் ராசா, புலியூர் கவி, விஜய், புட்லூர் தமிழ், சரண்ராஜ், முகேஷ், மேலக்கொண்டையூர் பிரபா, தொட்டிகளை பாட்ஷா,  திருவூர் ரஞ்சித், காக்களூர் ஈசாக், பூவை வேல்முருகன், உக்கோட்டை எம்.துளசிங்கம், பாண்டியன், தீபன், தனிகா, மாயா செல்வம், தயாநிதி, எஸ்.முருகன், ஆனந்தராஜ், இளங்கோ, சாலமன், வேலு, தீபன், தமிழரசன், ஜெய்பீம் ஜெய், புன்னபாக்கம்  தியாகு, வினோத், வேல்முருகன். கவியரசன். அப்பன்ராஜ். தமிழரசன், புனித அரசு, சக்தி, ஜெய்பீம் ஜெய் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

Tags : Bahujan Samaj Party ,Sathyamoorthy ,Puratchi Bharat ,
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...