×

வாகனங்கள் இடையூறாக நிறுத்தம் அமித்ஷா டிபன் சாப்பிட்டதால் போக்குவரத்து கடும் பாதிப்பு

கரூர், ஏப். 2: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து காரில் திருச்சி நோக்கி அமித்ஷா புறப்பட்டார். கரூரைத் தாண்டி திருச்சி பைபாஸ் சாலை கிருஷ்ணராயபுரத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர் ரவி என்பவர் ஹோட்டல் நடத்தி வருவதை கேள்விப்பட்ட அவர், உணவருந்த உள்ளே சென்றார். அமித்ஷாவுடன், தமிழக பாஜக பொறுப்பாளர் ரவி, மாநில நிர்வாகி விநாயகம், கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி ஆகிய நான்கு பேரும் டிபன் சாப்பிட்டனர்.

இதன் காரணமாக, கரூர் திருச்சி சாலையில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தியதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் வரிசைகட்டி நின்றது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளிலும் கடும் போக்குவரத்து பாதிப்பும், நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Amitsha Dipan ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே கடன் பிரச்னையால் பூ வியாபாரி தற்கொலை