×

வீதி, வீதியாக வாக்கு சேகரித்தனர் திருவையாறில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி

திருவையாறு,ஏப்.2: திருவையாறில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு தேர்தல் விதிமுறை பயிற்சி நடந்தது.திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் திருவையாறு தாலுகாவில் உள்ள வாக்குசாவடிகளில் பணியாற்றும் தன்னார்வு தொண்டா;களுக்கு தேர்தல் பணி பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவையாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா தலைமை வகித்தார். பயிற்சி முகாமில் தாசில்தார் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், கணேசன், நந்தினி, திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, சுகாதாரத்துறை ஆய்வாளர் செந்தில்குமார், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சதாசிவம், ஆகியோர் கலந்துகொண்டு வாக்குசாவடியில் வாக்கு அளிக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கையுறை வழங்குதல், உடல் வெப்ப நிலை பார்த்தல், கிரிமி நாசினி கொண்டு கையை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிய செய்வது போன்ற பணிகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 280 தன்னார்வு தொண்டர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags : Thiruvaiyar ,
× RELATED திருவையாறு கோயிலில் சித்திரை...