×

காந்திபுரம் பகுதியில் காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு

கோவை, ஏப். 1: கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அவர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். மேலும், பாத்திமா சர்ச் சென்று கிறிஸ்தவ மக்களிடம் ஆதரவு கோரினார். மத போதகரிடம் ஆசி பெற்றார். பின்னர், அப்பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மாபெரும் வெற்றியை பெறவுள்ளது. இப்பகுதியில் பாதாளச் சாக்கடை வசதி, தெருவிளக்கு பிரச்னை, மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் இத்தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். பொதுமக்கள் தங்களின் குறைகளை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். நான் இந்த மண்ணின் மைந்தன். தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இப்பகுதியில், சாக்கடை கால்வாய் வசதி, தெரு விளக்கு, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, திமுக நிர்வாகிகள் நாச்சிமுத்து, சிவா, தண்டபாணி, ஆர்.ஆர். மோகன்குமார், சேதுராமன், சுசி கலையரசன், லூயிஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Gandhipuram ,Mayura Jayakumar Polling ,
× RELATED கோவையில் ஜாலி ரைடு சென்ற நிர்மலாவை...