×

தாடிக்கொம்பு டாஸ்மாக் பாரில் ஒருவருக்கு கத்திக்குத்து

திண்டுக்கல், ஏப். 1: தாடிக்கொம்பு அருகே டி.பள்ளபட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (53). அதே ஊரை சேர்ந்த மணிவண்ணன் (27). இருவருக்கும்  இடப்பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் நேற்று முன்தினம் தாடிக்கொம்புவில் உள்ள டாஸ்மாக் பாரில் தனித்தனியே மது அருந்தி கொண்டிருந்தனர். திடீரென மணிவண்ணன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துச்சாமியை குத்தினார். உடனே அங்கிருந்தவர்கள் மணிவண்ணனை பிடித்து தாடிக்கொம்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ ரபீக் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த முத்துச்சாமியை மீட்டு திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மணிவண்ணனை கைது செய்தனர்.

Tags : Tasmac ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்