×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனல், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியது. அப்போது வெளிநாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த இன்ஜினியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தாலும், சென்னையை ஒட்டிய பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் பாதிப்படைந்தது.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரத்தில் 7 பேர், குன்றத்தூரில் 14, மாங்காடு 1, பெரும்புதூர் 3, வாலாஜாபாத் 1, உத்திரமேரூர் 3 மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 69 பேர் என மொத்தம் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Tags : Kansipura district ,
× RELATED கனமழை காரணமாக செங்கல்பட்டு,...