×

நெல்லை மாவட்டத்தில் பெண் டாக்டர் உட்பட 37 பேருக்கு கொரோனா

நெல்லை, மார்ச் 31: நெல்லை மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட மேலும் 37 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா பரிசோதனை முடிவுகள், நேற்று காலை வெளியானது. இதன்படி மொத்தம் 37 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை மாநகரில் பெண் டாக்டர் உட்பட 25 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

தியாகராஜநகர், என்ஜிஓ ‘பி' காலனி, ஜான்சன் நகர், சிவந்திநகர், பெருமாள்புரம், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பரவியுள்ளது. சிவந்தி நகரில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் வள்ளியூர், மானூர் வட்டாரத்தில் தலா இருவர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவர், பாளை வட்டாரத்தில் 5 பேர் என 12 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 35க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Corona ,Nellai district ,
× RELATED நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...