×

கருங்குளம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் கிராமம், கிராமமாக தீவிர பிரசாரம்

செய்துங்கநல்லூர் மார்ச் 31: வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் கருங்குளம் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருங்குளம் ஒன்றிய பகுதியான புளியங்குளம் கிராமத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சண்முகநாதன், கொங்கராயகுறிச்சி ஆழ்வார்கற்குளம், ஆறாம்பண்ணை, செய்துங்கநல்லூர், கீழ தூதுகுழி, கரையடி புதூர், கருங்குளம், தாதன்குளம், வல்லகுளம், கிளாக்குளம், அரசர்குளம், சேரகுளம், ராமானுஜம் புதூர், மகிழ்ச்சி புரம், சேரகுளம், இலுப்பைக்குளம், வெட்டி குளம், மேல சிறியந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது திரளான பெண்கள் வேட்பாளர் சண்முகநாதனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கொங்கராயகுறிச்சி கிராமத்தில் பிரசாரத்தின்போது சண்முகநாதன் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். கருங்குளம்-கொங்கராயகுறிச்சி ஆற்றுப்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1500, வீட்டில் ஒருவருக்கு அரசு பணி, முதியோருக்கான உதவி தொகை ரூ.2000 உயர்த்த நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.


பிரசாரத்தின் போது மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர்  முருகையா பாண்டியன், இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணியன், கொங்கராயகுறிச்சி கிளைச் செயலாளர் வெங்கடாசலம்,  கொங்கராயகுறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜாகீர் உசேன், பாஜ மண்டல தலைவர் கேசவன், கால்வாய் முருகன், முருகையா பாண்டியன், கதிரேசன், கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஆறாம்பண்ணை மஸ்தான், ஐயப்பன், அண்ணாமலை, சுப்பையாபாண்டியன், கனகராஜ், ஜான்சிராணி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Shanmuganathan ,Karungulam Union Territory ,
× RELATED விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பல்வேறு படிப்புகளில் சேர்ந்து