×

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவ அடையாள அணிவகுப்பு

அதிராம்பட்டினம்,மார்ச் 31: அதிராம்பட்டினத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அடையாள அணிவகுப்பு நடந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ல் நடக்கிறது. தேர்தலின்போது கலவரம் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் 80 துணை ராணுவப்படையினர் அடையாள அணிவகுப்பு நேற்று மாலை இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் நகர் முக்கிய வீதிகளில் நடந்தது.

அவர்களுடன் அதிராம்பட்டினம் போலீசாரும் இணைந்து சென்றனர். இதில் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் துவங்கிய இந்த பேரணி சேர்மன்வாடி, பேருந்து நிலையம், கிழக்குக் கடற்கரை சாலை வழியாக காலேஜ் முகத்தை துப்பாக்கி ஏந்தியபடி பேரணியாக வந்த அடைந்தனர். இதில் துணை கமாண்டர் ஜிதேந்தர் சிங் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Adirampattinam ,
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...