×

சாத்தூரில் கொடி அணிவகுப்பு

சாத்தூர், மார்ச் 31: சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 351 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 29 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதுகுறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சாத்தூரில் நேற்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் 30 துணை ராணுவத்தினர், 6 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 17 கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் என 230 பேர் பங்கேற்றனர். சாத்தூர், மதுரை சாலையில் அமைந்துள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மதுரை பேருந்து நிறுத்தம், சாத்தூர் பேருந்து நிலையம், முக்குராந்தல், வடக்கு ரத வீதி, தேசிய நெடுஞ்சாலை, அண்ணாநகர், படந்தால், குருலிங்காபுரம் வழியாக சென்று மீண்டும் டிஎஸ்பி அலுவலகம் வந்து நிறைவடைந்தது.

Tags : Sattur ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது