×

தேங்காய் வியாபாரியிடம் ரூ.1.40 லட்சம் பறிமுதல் ஆண்டிபட்டியில் அதிரடி

ஆண்டிபட்டி, மார்ச் 31: ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள செக்போஸ்டில், உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1.40 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.
ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துராமன் தலைமையில் அதிகாரிகளும், போலீசாரும் வாகன சோதனை நடத்தினர். அப்போது மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபரம் செய்து வரும் லோகநாதன் மகன் முகேந்திர பாண்டி (24) என்பவர் கடமலைக்குண்டு பகுதிக்கு தேங்காய் வாங்க வந்து கொண்டிருந்தார். அவர் வந்த சரக்கு வாகனத்தை மறித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆண்டிபட்டி கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி