×

பறக்கும்படை சோதனையில் நாமக்கல்லில் இதுவரை ₹86 லட்சம் பறிமுதல்

நாமக்கல், மார்ச். 31: நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை  சோதனையில் இதுவரை ₹86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை ₹278.73 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியுள்ளது.₹77.18 கோடி பணமாக கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாள் நெருங்கி கொண்டிருப்பதால் மாவட்டந்தோறும் தீவிர கண்காணிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம் மொத்தம் 54 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வாகன தணிக்கைகள் நடைபெறுகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ₹86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்ததால் ₹24 ல ட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தவிர சேலைகள், வேட்டிகள் என ₹6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nomakal ,
× RELATED புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு...