×

திருப்பாலைக்குடியில் சாலையின் நடுவே மின்கம்பத்தால் இடையூறு மாற்றி வைக்க கோரிக்கை


ஆர்எஸ்.மங்கலம், மார்ச் 30:  திருப்பாலைக்குடியில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது. ஆர்எஸ்.மங்கலம் அருகேயுள்ளது திருப்பாலைக்குடி. இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பஸ்நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையின் நடுவே இரும்பு கம்பத்தால் ஆன மின்கம்பம் ஒன்று உள்ளது. நடுரோட்டில் உள்ள இந்த மின்கம்பத்தால் இருபுறமும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக புதிதாக ஊருக்கு வரும் வாகனஓட்டிகளுக்கு இந்த மின்கம்பம் இருப்பது தெரியாமல் சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து நடந்து உயிர்சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர் நடுரோட்டில் உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடத்தில் மின்கம்பத்தை நட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupalaikudi ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்ற வாலிபர் பலி